மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 30, 2009

தலைவர்ங்க வாறாங்க தடுக்கு எடுத்துப்போடுங்கோ

அராசக வாதிகள்,அழிவுவாதிகள் எல்லாரும் கூடுறாங்கள்.ஆரூ அவர்கள் எண்டு யோசிப்பியள்.அப்பிடித்தானே?பயப்படாதேங்கோ.சொல்லிப்போடுறன்:
தலைவர்கள் வாறாங்க தடுக்கு எடுத்துப்போடுங்க.

புலி அழிஞ்சுபோச்சு.ஏகத் தலைவரும் அவர் குடும்பமும் அழிஞ்சிடிச்சி.அப்பச் சனநாயகம் வந்து மக்கள் பேசுவினம்.சனநாயகம் வந்துபோட்டால் ஆருக்கும் மக்களைப் பேய்க்காட்டிக் கொல்லமுடியாது.அவர்கள் மக்களைச் சொல்லிப்போட்டுக் காசும் சேர்க்க ஏலாது.எங்கட இயக்கக்காரருக்கு உது சம அடி.அப்ப அவங்க ஆருடனும் கூட்டுச் சேருவாங்க.அது மக்களுக்கு ஒண்டும் செய்யாட்டியும் மக்கள்பேரால தலைவர்கள் தாங்கதான் எண்டதுக்கு எந்துக்கூட்டும் சரி.
ஐயர் ஈழப் போராட்ட வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அசோக்கும் நாவலனும் புதிய சனநாயகக் கட்சிக்கும் சிவசேகரத்துக்கும் காவடிதூக்கித் தோப்புக்கரணம் போடுகினம்.அப்புறுமா ரகுமான் யானுக்கு பரீசில இடம்பிடிச்சு ஆள்க்கூட்டுகினம்.
செயபாலன் தேசம் நெற்றுக்குள்ள இவையளுக்கு வலைவிரிச்சுக் காத்துக்கிடக்கிறார்.
ராகவனும் நிர்மலாப் பொடிச்சியும் ஊருலக அரசுகளோடு கிழக்கில வசந்தம் வீசுகினம்.
வடக்கில ஈழத்துக் காஸ்றோ டக்ளசு வசந்தம் காட்டிக் காசு கேட்கிறார் மகிந்தாட்ட.மாண்புமிகுகள் இவர்கள்.
எல்லோரும் ஓடியாங்கள்!தலைவர்களைப் புடியுங்கோ.உந்தச் சனத்துக்கு விடியப்போகுது.உதுக்குள்ள இந்தியாவுக்கு,உளவுப்படை ராவ் மட்டும் எண்டு நினைச்சுப்போடாதேங்கோ.மேல வரும் தலையளும் எண்டு சொல்லிப் போடுங்கோ.செத்த புலிக்கு உயிர் குடுக்கும் புலத்துப்புலி அமெரிக்காவுக்குப் பாட்டுப்பாடுது.
நிம்மதியாப் படுத்துக்கிடந்த நாவலன் தமிழ்நாட்டுப் புரட்சிப்படையளையும் அண்டிக்கொண்டு வாறார்.நீங்க புரச்சி வந்துபோடும் எண்டு யோசிப்பீங்க.உதுக்கு நான் பொருப்பு இல்லீங்க.

உவங்களெல்லாம் தலைவரு.



சிவாசிலிங்கம் அண்ணா ஆருக்காக எங்கட மக்களப் பேய்க்காட்டுறார்?யோசிக்கிறீங்தானே?ஓம்.உது சரி.பிறகு கருணாய் புள்ளையான் பேய்க்காட்டும் ஞாபகம் உங்களுக்குவரும்.உவங்கட பாடு மகிந்த குடும்பத்துக்கு கூசாத் தூக்கிறது.இதுக்க எத்தனையோ புரட்டுக்கள் இருக்கு.சண்டை ஓஞ்சாலும் சதி ஓயாமாட்டேங்குது.ம் அடுத்து ஆட்டத்திலையும் சனங்கள் தோத்துப் போட்டினம்.சதிவலையில ராவுக்குப் பங்கு போட்டிருக்கு வன்னிப் புணங்களில.தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்பவும் இந்தியாவுக்குச் சட்ரீதியான ஒட்டுக்கட்சி.இப்ப ஆரட்டை இருக்கு தீர்வுக்கான கீ?உந்தத் தலைவர்களிட்டதான் எண்டு யோசீப்பீங்க.சும்மா அலையாதேங்கோ.உப்பிடி நம்புறதால மே 18 இயக்கம் ஒரளவு சரியானதெண்டும் யோசீப்பீங்க.உதுகளுக்கு சதி இருக்கெண்டு றயா எழுதிப்போட்டார்.உவங்கள நம்பக்கூடாது எண்டு சொல்லுறார்.

தமிழரங்கத்தை படிச்சுக்கொண்டுவாங்க.ஆரட்டை என்ன எண்டு தெரியலாம்.ஒண்டும் மட்டும் சொன்னா உந்தக்காலம் ஏவல் படையளின்ர காலம் பாருங்கோ.கிழடுபட்ட திமிங்கிலங்கள் உறுமும் காலம் எண்டும் சொல்லுறன்.ஒருக்கா மேல சொன்ன அழிவுவாதிகள்,அராசகவாதிகள் எவர் எண்டும் பாருங்க.உங்களத்தான் சொல்லுறன்.அம்மணமாச் சொன்னால் இவங்களுக்கு அரசியலே கொலைதான்.அவிட்டுவிட்ட வேட்டை நாயளளோடு ஆருக்கு உறவு வேண்டும்?எண்டு யோசிப்பீங்க.உதுதான் சரி.உப்ப லக்கியச் சந்திபில ஆட்களத்திரட்ட யானுக்கு யோசினையாம்.உவர்பாட்டுக்கு நிறையப்பிளானோட பேர்ளினில சந்திக்க சுசீந்திரனுக்குத் தூதுபோகிறது.ஆருக்கும் உதவிசெய்றதில சுசீ நல்லவரூ வல்வரூ.எதுக்கும் யானுக்குச் சரியான கூட்டம் வருகுது.உந்த ஓசை மனோக்கூட யானுக்கு உடந்தையாம்.மௌனத்திரன்ர கி.பி.அரவிந்தும் ரூட்மாத்தி வாசிக்கிறாராம்.திவாகரன்பாடு(சிவாசின்னப்பொடி)பெரிய முட்டுக்கட்டைமாதிரி இல்லை.அவரு ஐயரின் வரலாற்றில புலியளின்ர சதியை மறைக்கச் சொல்லி விரும்புறாராம்.எப்படியோ எல்லாரும் ஒரே றூட்டில சந்திகினம்.உப்ப அசோக்குப்பொடிக்கு இருக்கிற தொடர்வுகளில பெரிய மவுசு கட்டு வருகுது.பொடியன்படு பிசி.அதுக்குள்ள ரூட்மாத்தி ஓடப் பொடியனுக்கு நாவலன் மக்கள் கலை இலக்கியக் காரரைக் கிடுக்குப் புடியாய்புடிச்சுக்கொண்டு வாறாராம்.எல்லாம் ஒரு கனவுமாதிரிக் கிடக்கோ?பயப்படுறியள் எண்டு நினைக்கிறன்.ஓம்.உதில பாருங்க உப்புக்கும் கொலையளச் செஞ்சுபோட்டு ஊர்கூட்டி புரட்சி செஞ்சுவிட உவங்கள் போடும் காவடி உளவுக்காறங்களுக்கு செமக் கொண்டாட்டம்.புரட்சிக்காரங்க உவங்க தான் இப்ப.உண்மைச் சொன்னா தமிழரங்கத்தைப் படியுங்க.மெதுவா உண்மைகளை கண்டுபோடலாம்.

No comments:

Post a Comment